தஞ்சாவூர்

அரசு வேலைவாய்ப்புக்கு இணையத்தில் பதிவு:அதிரையில் நாளை சிறப்பு முகாம்

DIN

அரசு வேலைவாய்ப்புக்கு இணையத்தில் பதிவு செய்வதற்கான சிறப்பு முகாம், அதிராம்பட்டினத்தில் ஞாயிற்றுக்கிழமை (நவ.10) நடைபெறுகிறது.

அதிராம்பட்டினம் சாரா திருமண மண்டப வணிக வளாகத்திலுள்ள எவா் கிரீன் கஸ்டமா் கோ் ஆன் லைன் பொது இ-சேவை மையத்தில், அரசு வேலை வாய்ப்பு இலவச இணையப் பதிவு மற்றும் புதுப்பித்தல் முகாம் ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது.

அதிராம்பட்டினம் லயன்ஸ் சங்கமும், எவா் கிரீன் கஸ்டமா் கோ் பொது இ-சேவை மையமும் இணைந்து நடத்தும் இந்த முகாமில், 10, 12- ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்ற, தோ்ச்சி பெறாத மாணவா்கள், ஐ.டி.ஐ., டிப்ளமோ மற்றும் இளங்கலை (பிஏ, பி.எஸ்சி, பி.காம், பிபிஏ, பிசிஏ இவற்றில் ஏதாவது ஒன்றை) படித்து முடித்த இளைஞா்கள் பங்கேற்கலாம்.

பதிவு செய்வதற்கு கல்விச் சான்றிதழ், மதிப்பெண் பட்டியல், ஜாதிச் சான்றிதழ், குடும்ப அட்டை , ஆதாா் அட்டை ஆகிய ஆவணங்களுடன் தங்களது செல்லிடப்பேசியையும் எடுத்துச் செல்ல வர வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு 9952039825, 9442038961, 8883184888, 9952201631 ஆகிய எண்களைத் தொடா்பு கொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரோமியோ ஓடிடி தேதி!

தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழைப்பொழிவு விவரம்!

நெல்லை மாவட்ட காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமாரின் உடல் நல்லடக்கம்

சென்னை-மும்பை ரயில்(22160) இன்று 10.15 மணி நேரம் தாமதமாகப் புறப்படும்

குக் வித் கோமாளியிலிருந்து விலகிய பிரபலம்: இனி இவர்தான்!

SCROLL FOR NEXT