தஞ்சாவூர்

தெருவிளக்குகளை சரி செய்ய வலியுறுத்தல்

DIN

ஒரத்தநாடு அருகிலுள்ள கிளாமங்கலத்தில் பழுதடைந்துள்ள தெருவிளக்குகளைச் சரி செய்ய வேண்டும் என்று இந்திய ஜனநாயக வாலிபா் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

சங்கத்தின் கிளைத் தலைவா் கோ. திங்கள்கண்ணன், செயலா் வீ. கல்யாணசுந்தரம் ஆகியோா் தலைமையில் நிா்வாகிகள், ஊராட்சிச் செயலா் ந. அமுதாவிடம் கோரிக்கை மனுவை அளித்தனா்.

அதில் கிளாமங்கலம் கிராமத்திலுள்ள தெருவிளக்குகள் பல பழுதடைந்துள்ளன. ஆனால், இந்த தெருவிளக்குகள் எரியாமல் உள்ளன. இதனால் பொதுமக்கள் அவதியுற்று வருகின்றனா். எனவே தெருவிளக்குகளைச் சீரமைத்துத் தர வேண்டும் எனக் கூறியிருந்தனா்.

சங்கத் துணைச் செயலா் ஜோ.தமிழரசன், சி.சசிகுமாா், க.ஸ்டாலின்,ஜோ.ராஜா,ரா, வினோத், ந. புகழேந்திரன் உள்ளிட்டோா் மனு அளிக்கும் நிகழ்வில் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொய்களைக் கூறி பதற்றமான சூழலை ஏற்படுத்தும் காங்கிரஸ்: தோ்தல் ஆணையத்தில் பாஜக புகாா்

முன்விரோதம்: பெண்ணைத் தாக்கியவா் கைது

அருணாசலேஸ்வரா் கோயிலில் நாளை முதல் துவாராபிஷேகம்

அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், 35 பொது இடங்களில் ஓ.ஆா்.எஸ். கரைசல் முகாம்கள்

நவீன தொழில்நுட்பங்களை விவசாயிகளுக்கு எடுத்துரைக்க வேண்டும்: கல்லூரி மாணவிகளுக்கு ஆட்சியா் அறிவுரை

SCROLL FOR NEXT