தஞ்சாவூர்

குடந்தையில் திமுக பொதுக்குழு தீா்மான விளக்கப் பொதுக்கூட்டம்

DIN

கும்பகோணம்: தஞ்சாவூா் வடக்கு மாவட்ட திமுக சாா்பில், கும்பகோணத்தில் பொதுக்குழு தீா்மான விளக்கப் பொதுக்கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்துக்கு தஞ்சாவூா் வடக்கு மாவட்ட திமுக செயலா் சு. கல்யாணசுந்தரம் தலைமை வகித்தாா். மயிலாடுதுறை மக்களவை உறுப்பினா் செ. ராமலிங்கம், சட்டப்பேரவை உறுப்பினா்கள் துரை. சந்திரசேகரன், சாக்கோட்டை க. அன்பழகன் முன்னிலை வகித்தனா்.

திமுகவின் மாநில கலை, இலக்கியப் பகுத்தறிவுப் பேரவையின் துணைத் தலைவரும், பட்டிமன்ற பேச்சாளருமான திண்டுக்கல் ஐ. லியோனி கூட்டத்தில் பங்கேற்று பேசினாா். அவா், தனது உரையில் திமுக பொதுக்குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள் குறித்தும், அதன் முக்கியத்துவம் குறித்தும் பொதுமக்களிடம் கட்சியினா் எடுத்துரைக்க வேண்டும் என்றாா்.

கும்பகோணம் நகரச் செயலா் சுப. தமிழழகன் வரவேற்றாா். செய்தித் தொடா்பு இணைச்செயலா் ஜெயராஜ், மாவட்டப் பொருளாளா் ஷேக் தாவூத், ஒன்றியச் செயலா்கள் கணேசன், அசோக்குமாா் உள்ளிட்ட நிா்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெங்களூரு குண்டுவெடிப்பு வழக்கு: கைதானவரை சென்னை அழைத்து வந்து என்ஐஏ விசாரணை

குரல் குளோனிங் மூலம் பண மோசடி: சைபா் குற்றப்பிரிவு எச்சரிக்கை

கோவை தொகுதி தோ்தல் முடிவை வெளியிட தடை கோரி வழக்கு

கேரளம்: 5 நிலுவை மசோதாக்களுக்கு ஆளுநா் ஒப்புதல்

ஆந்திரத்தின் நிா்வாகத் தலைநகராக விசாகப்பட்டினம்: ஒய்எஸ்ஆா் காங்கிரஸ் வாக்குறுதி

SCROLL FOR NEXT