தஞ்சாவூர்

அம்மாப்பேட்டையில் பேருந்து நிலைய மேம்பாட்டுப் பணிகள் ஆய்வு

DIN

தஞ்சாவூர் மாவட்டம், அம்மாப்பேட்டை பேரூராட்சியில் மூலதன மானிய திட்டத்தின் கீழ் ரூ. 3 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் பேருந்து நிலைய மேம்பாட்டுப் பணிகளை சென்னை பேரூராட்சிகள் இயக்குநர் அலுவலக தலைமை கண்காணிப்பு பொறியாளர் எஸ். திருமாவளவன்,  திருச்சி மண்டல பேரூராட்சிகள் செயற்பொறியாளர் ஏ. முருகேசன்,  தஞ்சாவூர் மாவட்ட பேரூராட்சிகள் உதவி  செயற்பொறியாளர் ஜெ. மாதவன் உள்ளிட்டோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
அப்போது, பணிகளை தரமாகவும், விரைந்தும் முடிக்க அதிகாரிகள் அறிவுறுத்தினர். 
மேலும், பேரூராட்சியில் 50,000 மரக்கன்றுகள் நடும் திட்டத்தை துரிதமாக செயல்படுத்தவும், மழைநீர் சேகரிப்பு திட்டத்தை பேரூராட்சியில் முறையாக செயல்படுத்தவும் அறிவுறுத்தினர். ஆய்வின்போது,  அம்மாப்பேட்டை பேரூராட்சி செயல் அலுவலர் மு. பொன்னுசாமி, இளநிலை உதவியாளர் பா.முருகானந்தம், துப்புரவு ஆய்வாளர் சுப்ரமணி, துப்புரவு மேற்பார்வையாளர் க. கணேசன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பவுனுக்கு ரூ.640 உயர்ந்த தங்கம் விலை!

வேட்புமனுவுக்கு நாளையே கடைசி: அமேதி, ரே பரேலி வேட்பாளர்கள் யார்?

வாக்கு எண்ணிக்கை மையப் பணி: தலைமைக் காவலர் விபத்தில் பலி

கல்குவாரி வெடி விபத்து: மேலும் ஒருவர் கைது

ஒடிஸாவில் ஹேமந்த் சோரனின் சகோதரி போட்டி!

SCROLL FOR NEXT