தஞ்சாவூர்

ரயிலில் அடிபட்டு டீ விற்பவர் பலி

DIN

தஞ்சாவூர் ரயில் நிலையத்தில் புதன்கிழமை பிற்பகல் டீ விற்பவர் ரயிலில் அடிபட்டு உயிரிழந்தார்.
தஞ்சாவூர் அருகே கள்ளப்பெரம்பூரைச் சேர்ந்தவர் முத்தையா மகன் மணிவண்ணன் (38). இவர் தஞ்சாவூர் ரயில் நிலையத்தில் டீ, வடை விற்பனை செய்து வந்தார். இந்நிலையில், புதன்கிழமை பிற்பகல் மயிலாடுதுறை - திருச்சி பயணிகள் ரயிலில் பயணம் செய்த ஒருவருக்கு இவர் நடைமேடையிலிருந்து ஜன்னல் வழியாக டீ கொடுத்தார். காசு வாங்குவதற்குள் ரயில் புறப்பட்டது. எனவே, ஓடிச் சென்று காசை வாங்க முற்பட்ட மணிவண்ணன் நடைமேடைக்கும், ரயிலுக்கும் இடையிலுள்ள இடைவெளி வழியாக ஓடும் ரயிலில் சிக்கிக் கொண்டார். இதில், பலத்தக் காயமடைந்த இவர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து தஞ்சாவூர் ரயில்வே போலீஸார் விசாரித்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வடலூர்: நாம் தமிழர் கட்சியின் போராட்டம் ஒத்திவைப்பு

”கோவிஷீல்டு தடுப்பூசியால் மகளைப் பறிகொடுத்தேன்” -உச்சநீதிமன்றத்தில் தந்தை முறையீடு

நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து விலகும் மயங்க் யாதவ்!

எச்.டி. ரேவண்ணா கைது!

ஆம்பூர் அருகே சூறாவளி காற்றுடன் கன மழை: வாழை மரங்கள் சேதம்

SCROLL FOR NEXT