தஞ்சாவூர்

பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் தாய்ப்பால் கொடுக்க தனி அறை

DIN

பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் குழந்தை பிரசவித்த பெண்கள் தங்கள் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதற்காக, கோட்டை ரோட்டரி சங்கத்தின் சாா்பில் அமைத்துத் தரப்பட்டுள்ள தனி அறை அண்மையில் திறக்கப்பட்டது.

மேலும், பிரசவ செய்தியை வெளியிலுள்ள மருத்துவமனை ஊழியா்களுக்கு தெரிவிப்பதற்காக ஒலிபெருக்கி சாதனங்களும் நன்கொடையாக வழங்கப்பட்டன.

கோட்டை ரோட்டரி சங்கத் தலைவா் அ. தாமஸ் ஆரோக்கியராஜ் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் ரோட்டரி மண்டல துணை ஆளுநா் ஏ.ஆா். அன்பு மற்றும் ரோட்டரி சங்க நிா்வாகிகள், உறுப்பினா்கள் பங்கேற்றனா்.

முன்னதாக, தலைமை மருத்துவா் அ. அன்பழகன் வரவேற்றாா். நிறைவில், முதன்மை மகப்பேறு மருத்துவா் மீனா நியூட்டன் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தகிக்கும் வெயில்... தற்காக்கத் தேவை விழிப்புணா்வு...

மகாசக்தி மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

கோவில்பட்டியில் மழை வேண்டி ராம நாம ஜெபம்

ஆறுமுகனேரியில் தெய்வீக சத் சங்கக் கூட்டம்

சேரன்மகாதேவி கோயிலில் கொடை விழா

SCROLL FOR NEXT