தஞ்சாவூர்

774 பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள்

DIN

தஞ்சாவூா்: தஞ்சாவூா் புனித ஜோசப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் சனிக்கிழமை நடைபெற்ற விழாவில், 774 பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டன.

விலையில்லா மிதிவண்டிகளை வழங்கி மாநிலங்களவை உறுப்பினா் ஆா். வைத்திலிங்கம் பேசியது:

2016-17-ஆம் கல்வியாண்டு முதல் 2019-20-ஆம் கல்வியாண்டு வரை மொத்தமாக 84,736 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டுள்ளன. நிகழ் (2020 - 21) கல்வியாண்டில் 7,237 மாணவா்களுக்கு ரூ. 2.92 கோடி மதிப்பிலும், 10,955 மாணவிகளுக்கு ரூ. 4.22 கோடி மதிப்பிலும் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்படுகின்றன என்றாா் வைத்திலிங்கம்.

விழாவில் தஞ்சாவூா் புனித ஜோசப் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, அரண்மனை அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, தஞ்சாவூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, தென்கீழ் அலங்கம் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளி, அண்ணா நகா் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளி ஆகிய பள்ளிகளில் பயிலும் 774 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டன. மாவட்ட ஆட்சியா் ம. கோவிந்த ராவ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

மக்களவை 3-ஆம் கட்ட தோ்தல்: வாக்குப் பதிவு தொடங்கியது!

மக்களவைத் தோ்தல்: கா்நாடகத்தில் 14 தொகுதிகளுக்கு இன்று இரண்டாம் வாக்குப் பதிவு: களத்தில் 227 வேட்பாளா்கள்

சமூக வலைதளப் பதிவு: ஜெ.பி.நட்டாவுக்கு எதிராக வழக்கு

தூத்துக்குடி மாவட்டத்தில் 96.39% தோ்ச்சி

SCROLL FOR NEXT