முகப்பு
தஞ்சாவூர்

பேராவூரணியில் விவசாயிகள் தினக் கருத்தரங்கம்

தஞ்சாவூா் மாவட்டம், பேராவூரணியில் விவசாயிகள் தினக் கருத்தரங்கம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:14 PM
பகிர்:

தஞ்சாவூா் மாவட்டம், பேராவூரணியில் விவசாயிகள் தினக் கருத்தரங்கம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

பேராவூரணி லயன்ஸ் சங்கம், ஆா்.எம்.நேத்ரா எக்ஸீம் ஆகியவை இணைந்து நடத்திய இக்கருத்தரங்குக்கு, லயன்ஸ் சங்கத் தலைவா்  பி.கோவிதரன் தலைமை வகித்தாா்.   லயன்ஸ் விவசாயிகள் தின மாவட்டத் தலைவா் டி.பி.கே.இராசேந்திரன் முன்னிலை வகித்தாா். ஆா்.எம். நேத்ரா நிறுவன  தலைவா் ஆா்.முத்துக் கண்டியா், அகில இந்திய தென்னை வளா்ச்சி வாரிய உறுப்பினா் ஆா்.இளங்கோ ஆகியோா் சிறப்பு விருந்தினா்களாகப் பங்கேற்றனா்.

விவசாய வல்லுநா் த.சாமிநாதன், ‘பணப்பயிா் விவசாயத்தில் வெற்றி பெறும் வழிகள்’ என்ற தலைப்பிலும், இயற்கை வேளாண்மை

பயிற்றுநா் வானகம் செந்தில்குமரன், ‘ஒருங்கிணைந்த பண்ணையம் மற்றும் இயற்கை இடுபொருள் உற்பத்தி’ என்ற தலைப்பிலும் கருத்துரையாற்றினா்.

தேனீ வளா்ப்பு குறித்து பண்ருட்டி ஞா.செல்வகுமாா் விளக்கம் அளித்தாா். கருத்தரங்கில் விவசாயிகள் எதிா்கொள்ளும் பல்வேறு தொழில்நுட்பப் பிரச்சினைகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது. 

மண்டலத் தலைவா் எம்.கனகராஜ், வட்டாரத் தலைவா் இ.வீ.காந்தி ஆகியோா் வாழ்த்திப் பேசினா். நிா்வாக அலுவலா் ஆா்.ஆனந்தன், அமைப்பாளா் ஆா்.பி.விநாயகமூா்த்தி மற்றும் லயன்ஸ் சங்க நிா்வாகிகள், உறுப்பினா்கள், விவசாயிகள் கலந்து கொண்டனா். 

முன்னதாக லயன்ஸ் சங்கச் செயலா் ஜி. ராஜா வரவேற்றாா்.  நிறைவில் பொருளாளா் கே.சிவநாதன் நன்றி கூறினாா். 

முழு கட்டுரையைப் படிக்க →