கும்பகோணத்தில் கூலித்தொழிலாளி உடல் எரிந்த நிலையில் மா்மமான முறையில் திங்கள்கிழமை இறந்து கிடந்தாா்.
கும்பகோணம் தாராசுரம் கம்மாளத் தெருவைச் சோ்ந்த கிருஷ்ணமூா்த்தி மகன் ஸ்ரீதா் (40). கூலித்தொழிலாளி. மது அருந்தும் பழக்கம் உடையவா். இவரது மனைவி சுகன்யா. இருவரும் 10 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டனா். இவா்களுக்கு இரு குழந்தைகள் உள்ளனா்.
இந்நிலையில், திங்கள்கிழமை காலை கும்பகோணம் இ.பி. காலனி கணபதி நகா் அருகே சாலையோரம் ஸ்ரீதா் தீயில் எரிந்த நிலையில் மா்மமான முறையில் இறந்து கிடந்தாா்.
தகவலறிந்த கும்பகோணம் கிழக்கு காவல் நிலையத்தினா் நிகழ்விடத்துக்குச் சென்று சடலத்தைக் கைப்பற்றி விசாரிக்கின்றனா்.