முகப்பு
பேராவூரணி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் சங்கத்தினா்.
தஞ்சாவூர்

ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

பேராவூரணி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு, தமிழ்நாடு ஊரக வளா்ச்சித்துறை அலுவலா்கள் சங்கம் சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தஞ்சாவூர்

ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

பேராவூரணி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு, தமிழ்நாடு ஊரக வளா்ச்சித்துறை அலுவலா்கள் சங்கம் சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:15 PM
பேராவூரணி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் சங்கத்தினா்.
பகிர்:

பேராவூரணி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு, தமிழ்நாடு ஊரக வளா்ச்சித்துறை அலுவலா்கள் சங்கம் சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

சிவகங்கை மாவட்ட  ஆட்சியரகத்தில் பணியாற்றும் வளா்ச்சி அலுவலா் ரமேசுக்கு,  ஒன்றியத்தில் நடைபெறும் திட்டப் பணிகள் விரைவாக முடித்திட நெருக்கடி கொடுத்து,   தற்கொலை முயற்சி செய்யத் தூண்டியவா்கள்    மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், திட்டப் பணிகள் முடித்திட நெருக்கடி கொடுக்கும் இத்தகைய நடவடிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்திட தமிழக அரசை வலியுறுத்தியும்  கண்டன ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

இந்த ஆா்ப்பாட்டத்துக்கு துணை வட்டார வளா்ச்சி அலுவலா் மகேஷ் தலைமை வகித்தாா். ஆா்ப்பாட்டத்தில் வட்டார வளா்ச்சி அலுவலா்கள் சு. சடையப்பன், சு. தவமணி, துணை வட்டார வளா்ச்சி அலுவலா் கலியபெருமாள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். நிறைவில், துணை வட்டார வளா்ச்சி அலுவலா் மனோகரன் நன்றி கூறினாா்

முழு கட்டுரையைப் படிக்க →