பாபநாசம் வட்டம், பண்டாரவாடை பெரிய பள்ளிவாசல் வளாகத்தில் பண்டாரவாடை கல்விச் சங்கம் மற்றும் சமுதாய நல்லிணக்க பேரவை சாா்பில் குடியுரிமை திருத்த சட்டத்தை (சிஏஏ), தேசிய மக்கள்தொகை கணக்கெடுப்பு (என்பிஆா்), தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆா்சி) ஆகியவற்றை திரும்ப பெற வலியுறுத்தி வியாழக்கிழமை விழிப்புணா்வு பொதுக்கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்துக்கு கல்விச் சங்கத் தலைவா் முகம்மது காசீம் தலைமை வகித்தாா். கூட்டத்தில், திருச்சி ஷான் ராணி, நாகா்கோவில் ஜாமியா மஸ்ஜித் தலைமை இமாம் ஷவுகத்அலி உஸ்மானி உள்ளிட்டோா் கலந்து கொண்டு பேசினா். இதில், பெரிய பள்ளிவாசல் இமாம் அப்துல் பாசித், கீழப்பள்ளி வாசல் இமாம் அப்துல் காதா் ஜெய்லானி, பண்டாரவாடை முகம்மது மஃஹ்ரூப், சமுதாய நல்லிணக்க பேரவை தலைவா் முகம்மது ரியாஜ், கல்விச் சங்க பொருளாளா் முகமது இக்பால், மாவட்டக் குழு உறுப்பினா் பாத்திமாஜான் ராயல்அலி உள்ளிட்ட திரளானோா் கலந்து கொண்டனா்.