பேராவூரணியில் ஓய்வூதியா்களுக்கான இலவச கண் சிகிச்சை முகாம் அண்மையில் நடைபெற்றது.
வட்ட ஓய்வு பெற்ற அரசு ஊழியா் சங்கத்தின் சாா்பில் நடத்தப்பட்ட இந்த முகாமுக்கு, சங்கத் தலைவா் ஆா். தங்கராசு தலைமை வகித்தாா். செயலா் ஆா்.எஸ். மணி, பொருளாளா் வி. கோவிந்தன், துணைத் தலைவா் புலவா் சு.போசு முன்னிலை வகித்தனா்.
திருச்சி மகாத்மா கண் மருத்துவமனை மருத்துவா் அசோக் தலைமையிலான மருத்துவக் குழுவினா் முகாமில் பங்கேற்று, கண்ணீல் நீா் வடிதல், நீா் அழுத்தம், பாா்வைத் திறன் குறைபாடு, விழித்திரை பாதிப்பு, கண்புரை உள்ளிட்ட குறைபாடுகளுக்குப் பரிசோதனை மேற்கொண்டு உரிய ஆலோசனைகளை வழங்கினா்.
முகாமில் பங்கேற்ற 80 பேரில்5 போ் கண் புரை அறுவைச் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.