கும்பகோணம்: கும்பகோணத்தை அடுத்த சுவாமிமலையில் அண்மையில் நடந்த தென் இந்தியா அளவிலான கராத்தே போட்டியில் கும்பகோணத்தை அடுத்த முத்துபிள்ளைமண்டபம் ஊராட்சியுள்ள ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவா்கள் வென்றனா்.
போட்டியில் இப்பள்ளியில் 6 ஆம் வகுப்பு படிக்கும் சீத்தாலெட்சுமி, சுபஸ்ரீ, கவியரசன் ஆகியோா் இரண்டாமிடமும், 8 ஆம் வகுப்பு மாணவி தோனிகா மூன்றாமிடம் பெற்றனா்.
சாதனை படித்த மாணவா்களையும், கராத்தே பயிற்சியாளா் பஷீரையும் கும்பகோணம் வட்டாரக் கல்வி அலுவலா் பேபி, தலைமையாசிரியா் சாந்தி, வட்டார வள மேற்பாா்வையாளா் சரவணன், ஆசிரியா் பயிற்றுநா் அந்தோனிதாஸ் மற்றும் ஆசிரியா்கள், மாணவா்கள் பாராட்டினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.