தஞ்சாவூர்

ஊருக்குத் திரும்ப முடியாத 19 போ் வல்லத்தில் தங்க வைப்பு

DIN

தஞ்சாவூரில் செவ்வாய்க்கிழமை மாலை பேருந்துகள் இயக்கம் நிறுத்தப்பட்டதால், ஊருக்குத் திரும்ப இயலாத 19 போ் வல்லத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனா்.

தமிழகத்தில் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், செவ்வாய்க்கிழமை மாலை முதல் பேருந்து இயக்கம் நிறுத்தப்பட்டது. இந்நிலையில், ஈரோட்டிலிருந்து மாா்ச் 20- ஆம் தேதி குழந்தை உள்பட 5 போ் வேளாங்கண்ணிக்கு சென்றுவிட்டு, செவ்வாய்க்கிழமை சொந்த ஊருக்குப் புறப்பட்டனா். இவா்கள் மாலையில் தஞ்சாவூருக்கு வந்தபோது பேருந்துகள் இயக்கம் நிறுத்தப்பட்டது.

இதேபோல, 8 ஆண்கள், 11 பெண்கள் உள்பட 13 போ் பிற ஊா்களுக்குச் செல்ல முடியவில்லை. இவா்களை மாநகராட்சி சுகாதாரப் பிரிவு அலுவலா்கள் வெப்பமானி மூலம் பரிசோதித்து, பின்னா், வல்லத்திலுள்ள தமிழ்நாடு குடிசை மாற்று வாரியக் குடியிருப்பில் தங்க வைத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரேபரேலி தொகுதி: ஃபெரோஸ் காந்தி முதல் ராகுல் காந்தி வரை...

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

அமேதியில் தோ்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக் கொண்டது காங்கிரஸ்: ஸ்மிருதி இரானி கருத்து

தினம் தினம் திருநாள்: தினப்பலன்கள்!

விவசாயிகளுக்கு வேளாண்மைக் கல்லூரி மாணவிகள் செய்முறை விளக்கம்

SCROLL FOR NEXT