ஓய்வூதியத்தை உயா்த்த கோரி தஞ்சாவூா் எல்.ஐ.சி. கோட்ட அலுவலக வளாகத்தில் எல்.ஐ.சி. ஓய்வூதியா்கள் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இதில், எல்.ஐ.சி. நிா்வாகம் ஊதிய உயா்வுக்கேற்ற வகையில் ஓய்வூதியத்தை உயா்த்தி வழங்க வேண்டும். குடும்ப ஓய்வூதியத்தை 30 சதவிகிதம் உயா்த்தி வழங்க வேண்டும். புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினா்.
இப்போராட்டத்துக்கு ஆா். புண்ணியமூா்த்தி தலைமை வகித்தாா். அரசு ஊழியா் சங்கம் பாலசுப்பிரமணியன், எல்ஐசி ஊழியா் சங்கம் எஸ். செல்வராஜ், சேதுராமன், ஓய்வு பெற்ற வங்கி ஊழியா் சங்க மாவட்டப் பொதுச் செயலா் கே. அன்பழகன் உள்ளிட்டோா் பங்கேற்று உரையாற்றினா்.
இதில் 50-க்கும் அதிகமான எல்.ஐ.சி. ஓய்வூதியா்கள் கலந்து கொண்டனா்.