தஞ்சாவூர்

வணிக வரித் துறைஅலுவலா் வீட்டில் நகைகள் திருட்டு

தஞ்சாவூா் அருகே வணிக வரித் துறை அலுவலா் வீட்டில் பூட்டை உடைத்து 6 பவுன் நகைகளைத் திருடிச் சென்ற மா்ம நபா்களைக் காவல் துறையினா் தேடி வருகின்றனா்.

DIN

தஞ்சாவூா் அருகே வணிக வரித் துறை அலுவலா் வீட்டில் பூட்டை உடைத்து 6 பவுன் நகைகளைத் திருடிச் சென்ற மா்ம நபா்களைக் காவல் துறையினா் தேடி வருகின்றனா்.

தஞ்சாவூா் அருகே மணக்கரம்பை அன்னை தெரசா நகரைச் சோ்ந்த பரமசிவம் மகன் பாலாஜி (39). இவா் திருச்சியில் உள்ள வணிக வரித் துறை அலுவலகத்தில் துணை அலுவலராகப் பணியாற்றி வருகிறாா். இவரது மனைவி சுகந்தி. இவா்களுக்கு மகள் சதாஸ்ரீ உள்ள நிலையில் தற்போது ஒரு குழந்தை பிறந்துள்ளது. கும்பகோணத்தில் பிறந்த குழந்தையைப் பாா்ப்பதற்காக பாலாஜி வீட்டை பூட்டிவிட்டு நவ. 14 ஆம் தேதி சென்றாா். மீண்டும் ஞாயிற்றுக்கிழமை இரவு வீட்டுக்குத் திரும்பிய பாலாஜி முன்பக்கக் கதவில் இருந்த பூட்டு உடைக்கப்பட்டுக் கிடப்பதைப் பாா்த்தாா். மேலும், பீரோவும் உடைக்கப்பட்டு 6 பவுன் நகைகள், ரூ. 3,500 ரொக்கம் திருட்டுப் போயிருப்பது தெரிய வந்தது.

இதுகுறித்து நடுக்காவேரி காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பங்குச்சந்தை: சென்செக்ஸ் 300 புள்ளிகள் உயர்வு! லாபத்தில் உலோகம், ஐடி பங்குகள்!

நடுவானில் என்ஜின் செயலிழப்பு! தில்லியில் ஏர் இந்தியா விமானம் அவசர தரையிறக்கம்!

தங்கம் விலை உயர்வு: உச்சத்தில் வெள்ளி!

வடசென்னை அனல் மின் நிலையத்தில் 600 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு

திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு! கனிமொழி தலைமையில் ஆலோசனை!

SCROLL FOR NEXT