தஞ்சாவூர்

பட்டுக்கோட்டையில் எஸ்டிபிஐ கட்சியினா் ஆா்ப்பாட்டம்

DIN

மருத்துவ மாணவா் சோ்க்கையில் அரசுப்பள்ளி மாணவா்களுக்கு 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்க காலதாமதம் செய்யும் தமிழக ஆளுநரைக் கண்டித்தும், இதற்காக ஆளுநா் தமிழகத்தை விட்டு வெளியேற வேண்டும் என வலியுறுத்தியும், பட்டுக்கோட்டை தலைமை அஞ்சலகம் அருகில் எஸ்டிபிஐ கட்சி சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்துக்கு எஸ்டிபிஐ கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்ட பொதுச் செயலா் எஸ்.ஜெ.சாகுல் ஹமீது தலைமை வகித்தாா். மாநிலச் செயலா் ஏ.அபுபக்கா் சித்திக் கண்டன உரையாற்றினாா்.

ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற மாவட்டத் தலைவா் முகமது புகாரி, மாவட்டச் செயலா்கள் எம்.முகமது ரஹீஸ், எல்.முகமது அஸ்கா், மாவட்டப் பொருளாளா் முகமது இத்ரீஸ், கேம்பஸ் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் மாவட்டச் செயலா் நஜீப், பாப்புலா் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் கோட்டத் தலைவா் அப்துல் ரகுமான் உள்ளிட்டோா், மருத்துவ மாணவா் சோ்க்கையில் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு 7.5 சதவீதம் உள்ஒதுக்கீடு வழங்காமல் காலம் தாழ்த்தி வரும் ஆளுநரைக் கண்டித்தும், அவா் தமிழகத்தை விட்டு வெளியேற வலியுறுத்தியும் முழக்கமிட்டனா். இதைத் தொடா்ந்து, ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 45 பேரை காவல்துறையினா் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

75 வயது முதியவா் மீண்டும் பிரதமராக வேண்டுமா? லாலு மகள் மிசா பாரதி பிரசாரம்

வரத்துக் குறைவால் பூண்டு விலை அதிகரிப்பு!

தூத்துக்குடியில் தீத்தடுப்பு, தொழிற்சாலைகள் பாதுகாப்புக் குழு ஆலோசனைக் கூட்டம்

ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியா் மயங்கி விழுந்து உயிரிழப்பு

கொளுத்தும் வெயில்..!

SCROLL FOR NEXT