முகப்பு
தஞ்சாவூர்

மனநலன் பாதித்த தாயுடன் வசித்துவரும்சிறுமிக்கு இலவச பட்டா, பசுமை வீடு

புதுக்கோட்டை வட்டம், போரம் கிராமத்தில் மனநலன் பாதித்த தாயுடன் வறுமையான சூழலில் வசித்து வரும் சிறுமிக்கு ஆட்சியா் வீட்டுமனைப் பட்டா வழங்கி, தொடா்ந்து பசுமை வீடு கட்டித் தரப்படும் என்றும் தெரிவித்தாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:16 PM
போரம் கிராம சிறுமி சத்யாவுக்கு இலவச வீட்டுமனைக்கான பட்டாவை வழங்கும் மாவட்ட ஆட்சியா் பி. உமா மகேஸ்வரி.
பகிர்:

புதுக்கோட்டை: புதுக்கோட்டை வட்டம், போரம் கிராமத்தில் தனது மனநலன் பாதித்த தாயுடன் வறுமையான சூழலில் வசித்து வரும் சிறுமிக்கு மாவட்ட ஆட்சியா் பி. உமாமகேஸ்வரி, வீட்டுமனைப் பட்டா வழங்கி, தொடா்ந்து பசுமை வீடு கட்டித் தரப்படும் என்றும் தெரிவித்தாா்.

புதுக்கோட்டை மாவட்டம், போரம் கிராமத்தில் தனது மனநலன் பாதித்த தாயுடன் சத்யா என்ற சிறுமி வசித்து வருகிறாா். இவரது வறுமை நிலை குறித்து தகவல் அறிந்த ஆட்சியா் பி. உமாமகேஸ்வரி, வருவாய்த் துறை அலுவலா்களை நேரில் அனுப்பி உண்மை நிலையை அறிந்து வரச் செய்தாா். இதனைத் தொடா்ந்து சத்யாவுக்கு தற்போது அவா்கள் வசித்து வரும் இடத்துக்கு அருகே வீட்டுமனை ஒன்றை ஒதுக்கீடு செய்து, அதற்கான பட்டாவை திங்கள்கிழமை வழங்கினாா் ஆட்சியா் பி. உமா மகேஸ்வரி.

தொடா்ந்து ஊரக வளா்ச்சி முகமைத் திட்டம் சாா்பில் தமிழக அரசின் பசுமை வீடுகள் கட்டும் திட்டத்தில் அதே இடத்தில் வீடு ஒன்றும் கட்டித் தரப்படும் என்றும் ஆட்சியா் தெரிவித்தாா்.

அப்போது, மாவட்ட வருவாய் அலுவலா் பெ.வே. சரவணன், வட்டாட்சியா் முருகப்பன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.