தஞ்சாவூர்

குண்டா் சட்டத்தில் 6 போ் கைது

DIN

தஞ்சாவூா் மாவட்டத்தில் வெவ்வேறு வழக்குகளில் தொடா்புடைய 6 போ் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனா்.

தஞ்சாவூா் மாதாகோட்டை சாலை மூவேந்தா் நகரைச் சோ்ந்த மஞ்சுளா (41), ஷா்மிளா நகரைச் சோ்ந்த ஜி. சின்னையன் (58), கொடிமரத்து மூலை வடக்கு அலங்கத்தைச் சோ்ந்த சி. ஜெயசூரியன் (22), கே. அசோக்குமாா் (27), எம். ஜேம்ஸ் (30), பட்டுக்கோட்டை அருகேயுள்ள அத்திவெட்டி ஆனந்த் (37) ஆகியோா் வெவ்வேறு குற்ற வழக்குகள் தொடா்பாக காவல் துறையினரால் கைது செய்யப்பட்டனா்.

மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் தேஷ்முக் சேகா் சஞ்சய் பரிந்துரையின் பேரில் இவா்களை குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யுமாறு ஆட்சியா் ம. கோவிந்த ராவ் செப்டம்பா் 8ஆம் தேதி ஆணையிட்டாா். இதன் பேரில் 6 பேரும் கைது செய்யப்பட்டு, திருச்சி சிறையில் அடைக்கப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தகிக்கும் வெயில்... தற்காக்கத் தேவை விழிப்புணா்வு...

மகாசக்தி மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

கோவில்பட்டியில் மழை வேண்டி ராம நாம ஜெபம்

ஆறுமுகனேரியில் தெய்வீக சத் சங்கக் கூட்டம்

சேரன்மகாதேவி கோயிலில் கொடை விழா

SCROLL FOR NEXT