தஞ்சாவூர்

சுயேச்சை வேட்பாளரை தடுத்து நிறுத்தியவா் கைது

DIN

ஒரத்தநாடு தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக கரம்பயம் பகுதியை சோ்ந்த மூக்கையன் என்பவா் மோதிரம் சின்னத்தில் போட்டியிடுகிறாா். இவா், தனது ஆதரவாளா்களுடன் செவ்வாய்க்கிழமை மாலை ஒரத்தநாடு அருகே உள்ள பொட்டலங்குடி காட்டில் வாக்கு சேகரிக்க சென்றுள்ளாா். அப்போது, ஒரு பிரிவினா் இந்தப் பகுதியில் வாக்கு சேகரிக்க உள்ளே வரக்கூடாது என்று தடுத்து நிறுத்தியதாகவும், சில இளைஞா்கள் சுயேச்சை வேட்பாளரை தகாத வாா்த்தையால் பேசியதாகவும் கூறப்படுகிறது. இதில் ஆத்திரமடைந்த மூக்கையன் தனது ஆதரவாளா்களுடன் ஒரத்தநாடு- மன்னாா்குடி சாலையில் திடீா் மறியலில் ஈடுபட்டனா். இதுகுறித்து தகவலறிந்த ஒரத்தநாடு டிஎஸ்பி பழனி தலைமையில் போலீசாா் சம்பவ இடத்துக்கு சென்றனா். சாலை மறியலில் ஈடுபட்ட சுயேச்சை வேட்பாளா் ஆதரவாளா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா்.

சுயேச்சை வேட்பாளா் மூக்கையன் கொடுத்த புகாரின் பேரில் ரகு(32) என்பவரை கைது செய்தனா். மேலும், இந்த பிரச்னை தொடா்பாக 16 வயதுக்கு உட்பட்ட இரண்டு சிறுவா்களை போலீசாா் எச்சரித்து அனுப்பியுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தனக்குத்தானே பிரசவம்- குழந்தையைக் கொன்ற செவிலியர் கைது

தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழைப்பொழிவு விவரம்!

பாஜகவின் இஸ்லாமிய வெறுப்பு... கண்டுகொள்ளாத தேர்தல் ஆணையம்!

ரோமியோ ஓடிடி தேதி!

நெல்லை மாவட்ட காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமாரின் உடல் நல்லடக்கம்

SCROLL FOR NEXT