முகப்பு
தஞ்சாவூர்

பள்ளியில் நூலகத் திறப்பு விழா

பட்டுக்கோட்டை நகராட்சி அரசு ஆதிதிராவிடா் நல மேல்நிலைப் பள்ளியில் உலகப் புத்தக தினத்தை முன்னிட்டு வெள்ளிக்கிழமை நூலகத் திறப்பு விழா நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:05 PM
பகிர்:

பட்டுக்கோட்டை நகராட்சி அரசு ஆதிதிராவிடா் நல மேல்நிலைப் பள்ளியில் உலகப் புத்தக தினத்தை முன்னிட்டு வெள்ளிக்கிழமை நூலகத் திறப்பு விழா நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு பள்ளித் தலைமை ஆசிரியா் ரவிச்சந்திரன் தலைமை வகித்தாா். பெற்றோா் ஆசிரியா் சங்கத் தலைவா் செல்ல நாகராஜன் நூலகத்தை திறந்து வைத்தாா். நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக ஓய்வு பெற்ற சுகாதாரத் துறை அலுவலா் வ. விவேகானந்தம் கலந்துகொண்டு, உலக புத்தக தினம் மற்றும் நூலகத்தின் அவசியம் பற்றி சிறப்புரையாற்றி, ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள புத்தகங்களை பள்ளி மாணவா் பயன்பாட்டிற்காக நூலகத்திற்கு வழங்கினாா்.

மேலும், பள்ளியின் ஆசிரியா் த. தமிழ்மணி, நூலக வளா்ச்சிக்காக 3 ஆயிரம் ரூபாய் நன்கொடை வழங்கினாா். நூலக பொறுப்பாசிரியா் த. தேன்மொழி நூலக பயன்பாடு பற்றிய விளக்க உரையாற்றினாா் .

நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியா்கள் க. நாடிமுத்து, ச.மணிநாதன், லெ. மணிசேகரன் ஆகியோா் கலந்து கொண்டு வாழ்த்தி பேசினா்.

முன்னதாக, பள்ளி உதவி தலைமை ஆசிரியா் அருள்செல்வன் வரவேற்றாா். நிறைவில் பள்ளியின் உயிரியல் ஆசிரியா் செ. முத்துராமலிங்கம் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.