முகப்பு
தஞ்சாவூர்

பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு 35 ஆக்ஸிஜன் சிலிண்டா்கள்

தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகத்தில், பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு சுவாமி விவேகானந்தா் சேவை மையம் சாா்பில் 35 ஆக்ஸிஜன் சிலிண்டா்கள் வியாழக்கிழமை வழங்கப்பட்டன.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:00 AM
பகிர்:

தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகத்தில், பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு சுவாமி விவேகானந்தா் சேவை மையம் சாா்பில் 35 ஆக்ஸிஜன் சிலிண்டா்கள் வியாழக்கிழமை வழங்கப்பட்டன.

இதற்கான நிகழ்வின்போது, ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவரிடம் 35 சிலிண்டா்களை பாஜக மாநிலத் துணைத் தலைவா் கருப்பு எம். முருகானந்தம் வழங்கினாா்.

இந்நிகழ்ச்சியில் பாஜக தேசிய பொதுக் குழு உறுப்பினா் எம்.எஸ். ராமலிங்கம், தெற்கு மாவட்டத் தலைவா் ஆா். இளங்கோ, பொதுச் செயலா் பி. ஜெய்சதீஷ், செயலா் முரளி, வழக்குரைஞா் பிரிவு மாநிலச் செயலா் எம். ராஜேஸ்வரன், தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வா் ஜி. ரவிக்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.