தஞ்சாவூர்

தஞ்சாவூர் அருகே லாரி மோதியதில் 3 பேர் பலி

DIN


தஞ்சாவூர்: தஞ்சாவூர் அருகே ஞாயிற்றுக்கிழமை அதிகாலை லாரி மோதியதில் மூன்று பேர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர்.

தஞ்சாவூர் அருகே கும்பகோணம் புறவழிச்சாலையில் கடகடப்பை பகுதியில் சாலை நடுத்திட்டில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 2 மணியளவில் 3 பேர் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர்.

அப்போது இவர்கள் மீது பட்டுக்கோட்டையிலிருந்து தஞ்சாவூர் வழியாக கும்பகோணம் நோக்கி சென்று கொண்டிருந்த லாரி மோதியது. பின்னர் இந்த லாரி மூவரும் அருகில் நிறுத்தி வைத்திருந்த கார் மீது மோதி நின்றது.

இந்த விபத்தில் வல்லம் அருகே நாட்டாணியைச் சேர்ந்த பிரசாத் (41), மாரியம்மன் கோவில் அருகே மருங்கையைச் சேர்ந்த சந்திரசேகர் (32), வலங்கைமான் அருகே அரித்துவாரமங்கலம் பகுதி அவளிவநல்லூரைச் சேர்ந்த சுதாகர் (27)  ஆகியோர் பலத்தக் காயமடைந்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர்.

இதுகுறித்து தஞ்சாவூர் தாலுகா காவல் நிலையத்தினர் தப்பியோடிய லாரி ஓட்டுநரை தேடி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாகை - இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்குவதில் தொடரும் சிக்கல்

மண் அரிப்பு: இடிந்து விழுந்த துலாக்கட்ட சுவா்

ஹரியாணா: பேருந்து தீ பிடித்த விபத்தில் 9 போ் உயிரிழப்பு

யானை வழித்தடங்கள் குறித்து ஆன்லைனில் கருத்துக்கேட்பு கூடாது: மத்திய அமைச்சா் முருகன்

வீட்டு முன் நிறுத்தியிருந்த சைக்கிள் திருட்டு

SCROLL FOR NEXT