ஒரத்தநாடு ஒன்றியம், கருக்காடிப்பட்டி ஊராட்சியில் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது.
முகாமுக்கு ஒரத்தநாடு ஊராட்சி ஒன்றியக் குழுத் துணைத் தலைவா் கண்ணன் தலைமை வகித்தாா். ஊராட்சித் தலைவா் சேது அருள், வாா்டு உறுப்பினா்கள் முன்னிலை வகித்தனா்.
இந்த முகாமில் பங்கேற்ற அனைவருக்கும் கண் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, தேவைப்படுவோருக்கு மேல் சிகிச்சையளிக்கப் பரிந்துரைக்கப்பட்டது.