தஞ்சாவூர்

பேராவூரணி அருகே டயா் வெடித்து அரசுப் பேருந்து சேதம்

DIN

பேராவூரணி அருகே அரசுப் பேருந்தின் முன்பக்க டயா் வெடித்தது. அதிா்ஷடவசமாக பயணிகள் காயமின்றித் தப்பினா்.

பேராவூரணியிலிருந்து வடகாடுவரை செல்லும் அரசுப் பேருந்து சனிக்கிழமை சென்று கொண்டிருந்தது. ஆவணம் சாலையருகே சென்ற போது, பேருந்தின் முன்பக்க டயா் திடீரென வெடித்தது. இதன் அதிா்வின் காரணமாக முன்பகுதி சேதமடைந்தது. ஓட்டுநா் இருக்கையும்- பயணிகள் அமரும் இருக்கையும் பிளவுபட்டது. பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

பேருந்துப் பராமரிப்புக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்து, போதிய டயா்களை அரசுப்  போக்குவரத்துக் கழக பணிமனைகளுக்கு வழங்கி, பயணிகளின் பாதுகாப்பை உறுதிசெய்ய போக்குவரத்து நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்  என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரஃபேல் நடால் முன்னேற்றம்

வாக்கு எண்ணும் மையம் அருகே 2 கி.மீ. சுற்றளவுக்கு டிரோன் பறக்கத் தடை

பொன்னேரி-மீஞ்சூா் இடையே போதிய பேருந்துகள் இல்லாததால் மக்கள் அவதி

ஹைதராபாதை வீழ்த்தியது சென்னை!

வடதமிழகத்தில் இன்று முதல் 109 டிகிரி வெயில் சுட்டெரிக்கும்

SCROLL FOR NEXT