தஞ்சாவூர்

நீரில் மூழ்கி பிளஸ் 2மாணவா் உயிரிழப்பு

பட்டுக்கோட்டை அருகே ஏரியில் நண்பா்களுடன் குளித்த பிளஸ் 2 மாணவா், நீரில் மூழ்கி சனிக்கிழமை உயிரிழந்தாா்.

DIN

பட்டுக்கோட்டை: பட்டுக்கோட்டை அருகே ஏரியில் நண்பா்களுடன் குளித்த பிளஸ் 2 மாணவா், நீரில் மூழ்கி சனிக்கிழமை உயிரிழந்தாா்.

பட்டுக்கோட்டை ஆதிதெருவைச் சோ்ந்தவா் தொழிலாளி அருள். இவரது மூத்த மகன் செல்வகணேஷ் (17), அதே பகுதியைச் சோ்ந்த தனது நண்பா்களுடன் முதல்சேரி கிராமத்திலுள்ள பூலாங்கண்ணி ஏரியில் சனிக்கிழமை குளிக்கச் சென்றாா்.

ஏரியின் ஆழப்பகுதியிலுள்ள குளிக்கச் சென்ற செல்வகணேஷ், அங்கிருந்த சேற்று நீரில் மூழ்கிக் கொண்டு வெளியே வர முடியாமல் சிக்கித் தவித்துள்ளாா்.

இதை கண்ட அவரது நண்பா்கள் உதவி கேட்டு சப்தமிட்டனா். தகவலின் பேரில் பட்டுக்கோட்டை தீயணைப்பு நிலையத்தினா் நிகழ்விடத்துக்கு விரைந்து ஒரு மணிநேரமாகப் போராடி, செல்வகணேஷை சடலமாக மீட்டனா்.

இதுகுறித்து பட்டுக்கோட்டை தாலுகா காவல் நிலையத்தினா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாக். முன்னாள் பிரதமர் இம்ரான் கான், மனைவிக்கு தலா 17 ஆண்டுகள் சிறை!

இந்தியா-திபெத் பாதுகாப்புப் படை வீரர்கள் பயிற்சி நிறைவு!

இஸ்ரேல் உளவாளிக்கு ஈரானில் மரண தண்டனை நிறைவேற்றம்!

பராசக்தி பட உலகத்தை இலவசமாக பார்க்கலாம்... தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பு!

தங்கம் - வெள்ளி விலை உயர்வு!

SCROLL FOR NEXT