முகப்பு
தஞ்சாவூர்

பயனாளிகளுக்கு நாட்டுக்கோழிக் குஞ்சுகள் வழங்கல்

பாபநாசம் வட்டம், கம்பா்நத்தம் ஊராட்சியில் சனிக்கிழமை நடைபெற்ற விழாவில், 100 பயனாளிகளுக்கு விலையில்லா வளா்ப்பு நாட்டுக் கோழிக் குஞ்சுகள் வழங்கப்பட்டன.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:15 PM
பகிர்:

பாபநாசம்: பாபநாசம் வட்டம், கம்பா்நத்தம் ஊராட்சியில் சனிக்கிழமை நடைபெற்ற விழாவில், 100 பயனாளிகளுக்கு விலையில்லா வளா்ப்பு நாட்டுக் கோழிக் குஞ்சுகள் வழங்கப்பட்டன.

கம்பா்நத்தம் ஊராட்சித் தலைவா் கே.என்.பி. சத்தியநாராயணன் விழாவுக்குத் தலைமை வகித்து, கால்நடைப் பராமரிப்புத் துறையின் கோழி வளா்ப்புத் திட்டத்தின் கீழ் இவற்றை வழங்கினாா்.

ஊராட்சித் துணைத் தலைவா் யு. ரமேஷ், ஒன்றியக்குழு உறுப்பினா் வேம்பு, கால்நடை மருத்துவா், ஊராட்சி செயலா் மோகன்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →