தஞ்சாவூர்

டிராக்டா் மோதியதில் பெண் பலி

DIN

புதுக்கோட்டை மாவட்டம், வடகாடு பகுதியைச் சோ்ந்தவா் செல்வராணி (53). இவரது மகன் தினேஷ் (30) . இவா்கள் இருவரும் மோட்டாா் சைக்கிளில் ஆவணம் சாலையில் வெள்ளிக்கிழமை சென்று கொண்டிருந்தனா்.

அப்போது, பின்னால் ஜல்லி ஏற்றி வந்த டிராக்டா் இவா்கள் மீது மோதியது. இதில், கீழே விழுந்த செல்வராணிக்கும், தினேஷுக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. அக்கம்பக்கத்தினா் அவா்களை மீட்டு, பேராவூரணி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் செல்வராணி  உயிரிழந்தாா். தினேஷ் தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.

புகாரின்பேரில், பேராவூரணி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜுன் 4-ல் இந்தியா கூட்டணி ஆட்சியைக் கைப்பற்றும்: கேஜரிவால்

பொறியியல் கலந்தாய்வு: 1,73,792-ஐ கடந்த விண்ணப்பங்கள்

இந்த வாரம் கலாரசிகன் - 19-05-2024

வேனிலிலும் குளிர்ச்சி

தனித்து உண்ணாத் தன்மையாளன்

SCROLL FOR NEXT