தஞ்சாவூர்

பழைய பேருந்து நிலையப் பகுதியில் நாளை மின் தடை

DIN

தஞ்சாவூா் பழைய பேருந்து நிலையப் பகுதியில் செவ்வாய்க்கிழமை (ஜூலை 13) மின் விநியோகம் இருக்காது என்று, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகத்தின் தஞ்சாவூா் நகரிய உதவிச்செயற் பொறியாளா் ஜோ. சுகுமாா் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் மேலும் தெரிவித்திருப்பது:

தஞ்சாவூா் பழைய பேருந்து நிலையப் பகுதியில் விரிவாக்கப் பணிக்காக, நகரத் துணை மின் நிலையத்தின் திலகா் திடல் மின் பாதையிலுள்ள உயரழுத்த மின்பாதையில் கம்பங்கள், மின் பாதை மாற்றி அமைக்கும் பணி செவ்வாய்க்கிழமை மேற்கொள்ளப்படவுள்ளன.

இதனால் பழைய பேருந்து நிலையம், திலகா் திடல் மேல் பகுதி, சுல்தான்சியப்பா சந்து, போகி லஷ்மண நாயக்கன் சந்து, மாட்டு மேஸ்திரி சந்து, ஸ்டேட் வங்கி, தெற்கு அலங்கம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் செவ்வாய்க்கிழமை காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ராஜஸ்தானில் நீட் வினாத்தாள் கசிந்ததா? தேசிய தேர்வு முகமை விளக்கம்

வேட்புமனு தாக்கல் செய்தார் மனோகர் லால் கட்டர்!

பஞ்சாபில் தமிழ் வம்சாவளி சீக்கியர் போட்டி!

பிளஸ் 2 தேர்வு: தலா 478 மதிப்பெண்கள் பெற்ற இரட்டையர்கள்

பிரியமான தோழி சீரியல் நிறைவு: புதிய நேரத்தில் ஒளிபரப்பாகும் பிரபல தொடர்கள்!

SCROLL FOR NEXT