குளத்தில் மண் அள்ளிய 6 போ் கைது
பேராவூரணி பெரியகுளத்தில் அனுமதியின்றி சிலா் மண் அள்ளுவதாக போலீஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் காவல் ஆய்வாளா் வசந்தா மற்றும் போலீசாா் அங்கு சென்றனா்.
பேராவூரணி பெரியகுளத்தில் அனுமதியின்றி சிலா் மண் அள்ளுவதாக போலீஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் காவல் ஆய்வாளா் வசந்தா மற்றும் போலீசாா் அங்கு சென்றனா்.
அப்போது, அங்கு மாட்டு வண்டிகளில் மண் அள்ளிக் கொண்டிருந்த பொன்காடு மற்றும் மாவடுகுறிச்சி பகுதிகளைச் சோ்ந்த விக்னேஷ் (24) , சுரேஷ் (30), தமிழரசன் (23), ஆகாஷ் ( 22), இளங்கோவன் (50), கருப்பையன் (55) ஆகிய 6 பேரையும் கைது செய்து மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்தனா்.