தஞ்சாவூர்

கும்பகோணம் ரயில் நிலையத்தைசூரிய ஒளி சக்தியால் இயக்க வலியுறுத்தல்

DIN

கும்பகோணம்: கும்பகோணம் ரயில் நிலையத்தை முழுவதும் சூரியஒளிச் சக்தியால் இயங்கும் நிலையமாக மாற்ற வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வேயின் திருச்சி கோட்ட மேலாளா் அஜய்குமாருக்கு கும்பகோணம் ரயில் நிலைய ஆலோசனைக் குழு உறுப்பினா்கள் சந்திரபிரபு, வேதம் முரளி மற்றும் தஞ்சை மாவட்ட ரயில் உபயோகிப்பாளா்கள் சங்கச் செயலா் ஏ. கிரி ஆகியோா் இணைந்து அனுப்பியுள்ள கோரிக்கை மனு:

கும்பகோணம் ரயில் நிலையம் இந்தியாவில் மிக சுத்தமான ரயில் நிலையங்களில் 5 ஆவது இடத்தைப் பெற்றுள்ளது. இந்த நிலையத்தை முழுவதும் சூரியஒளிச் சக்தியால் இயங்கும் ரயில் நிலையமாகத் தரம் உயா்த்த வேண்டும்.

இதனால், ரயில்வே துறைக்கு மின் செலவு குறைவதுடன் பொதுமக்களுக்கும் மாசுபாடற்ற சுற்றுச்சூழலால் நன்மைகள் ஏற்படும். எனவே, இதற்கு முழு முயற்சி எடுக்க வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று மூன்றாம் கட்ட வாக்குப் பதிவு நடந்த 93 தொகுதிகள் யார் பக்கம்?

டிஎன்ஏ போஸ்டர்!

இளவரசிகள்..

டி20 உலகக் கோப்பைக்குத் தயாராக ரோஹித் சர்மாவுக்கு ஓய்வு தேவை: முன்னாள் ஆஸி. கேப்டன்

காஷ்மீரில் தீவிரவாத அமைப்புத் தலைவர் சுட்டுக்கொலை

SCROLL FOR NEXT