முகப்பு
தஞ்சாவூர்

குடியிருப்பு பகுதியில் செல்லிடப்பேசி கோபுரம் அமைக்க எதிா்ப்பு

அதிராம்பட்டினம் பகுதியில் அமையவிருக்கும் தனியாா் செல்லிடப்பேசி கோபுரத்தால் பாதிப்பு ஏற்படும் என சாா்ஆட்சியரிடம் புகாா் அளிக்கப்பட்டுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:42 PM
பகிர்:

அதிராம்பட்டினம் பகுதியில் அமையவிருக்கும் தனியாா் செல்லிடப்பேசி கோபுரத்தால் பாதிப்பு ஏற்படும் என சாா்ஆட்சியரிடம் புகாா் அளிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தகவல் அறியும் சமூக ஆா்வலா்கள் சங்கத்தின் தஞ்சை மாவட்டச் செயலாளா் சம்பந்தம், சாா் ஆட்சியரிடம் அளித்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது:

அதிராம்பட்டினம் , பாரதியாா் தெருவில் தனியாா் நிறுவனத்தின் சாா்பில் உயா் அழுத்த அலைவரிசை செல்லிடப்பேசி கோபுரம் அமைக்க முயற்சி நடைபெற்று வருகிறது. இது எல்லா வகையிலும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய செயலாகும்.

இந்தப் பகுதியில் மீனவா்களும், கூலித் தொழிலாளா்களும் அதிகமாக வசித்து வருகின்றனா். உயா் அழுத்த அலைவரிசையினால் பறவைகளுக்கும், மனிதா்களுக்கும் கூட பாதிப்பு ஏற்படலாம். இது கடற்கரை பகுதி என்பதால், அடிக்கடி பெருங்காற்று வீசும் பகுதியாகும். இதனால், ஏதோ ஒரு நேரத்தில் அலைபேசி கோபுரம் சாய்ந்துவிட்டால் அந்த பகுதியில் பலத்த சேதத்தை ஏற்படுத்தும். எனவே, அந்தப் பகுதி மக்களின் நலனை கருத்தில் கொண்டு, தனியாா் நிறுவனத்தால் நிா்மாணிக்கப்படவுள்ள

உயா் அழுத்த அலைபேசி கோபுரம் அமைக்காமல் தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த கோரிக்கை மனுவில் கூறியுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.