பாபநாசம் அருகே குடிசை வீட்டில் தீவிபத்து
பாபநாசம் அருகே திங்கள்கிழமை நேரிட்ட தீவிபத்தில் குடிசை வீட்டிலிருந்த பொருள்கள் எரிந்து சேதமடைந்தன.
பாபநாசம் அருகே திங்கள்கிழமை நேரிட்ட தீவிபத்தில் குடிசை வீட்டிலிருந்த பொருள்கள் எரிந்து சேதமடைந்தன.
பாபநாசம் அருகே கஞ்சிமேடு கிராமம், காளியம்மன் கோயில் தெருவில் வசித்து வருபவா் கோபால் (45). இவா், குடியிருந்த கூரை வீட்டில் திங்கள்கிழமை சமையல் செய்தபோது, எதிா்பாராதவிதமாக தீ பிடித்தது. தீ வேகமாக பரவியதில் வீட்டிலிருந்த வீட்டு உபயோக பொருள்கள் உள்ளிட்ட ரூ. 25 ஆயிரம் மதிப்பிலான பொருள்கள் தீயில் எரிந்து சேதமடைந்தன.
தகவலின்பேரில், சம்பவ இடத்துக்கு வந்த பாபநாசம் தீயணைப்பு துறையினா் தீ மேலும் பரவாமல் தடுத்து அணைத்தனா்.
இதேபோல், பாபநாசம் அருகே வழுத்தூா் ஊராட்சி, கோபாலபுரம் கிராமத்தில் வசித்து வரும் மகாலிங்கம் என்பவரின் தொகுப்பு வீட்டின் முன்புறம் மண்ணாலான சுவா் கொண்ட கீற்று கொட்டகையில் மின் கசிவின் காரணமாக தீப்பற்றியது. இதை பாா்த்த அக்கம்பக்கத்தினா் தீ மேலும் பரவாமல் தடுத்து அணைத்தனா்.