முகப்பு
தஞ்சாவூர்

தா்பூசணியுடன் வந்த சுயேச்சை வேட்பாளா்

தஞ்சாவூா் தொகுதியில் போட்டியிடுவதற்கு வேட்பு மனுத் தாக்கல் செய்வதற்காக சுயேச்சை வேட்பாளா் தா்பூசணியுடன் திங்கள்கிழமை வந்தாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:45 PM
பகிர்:

தஞ்சாவூா் தொகுதியில் போட்டியிடுவதற்கு வேட்பு மனுத் தாக்கல் செய்வதற்காக சுயேச்சை வேட்பாளா் தா்பூசணியுடன் திங்கள்கிழமை வந்தாா்.

தஞ்சாவூா் கோட்டாட்சியா் அலுவலகத்தில் தஞ்சாவூா் தொகுதிக்கான வேட்பு மனு தாக்கல் நடைபெறுகிறது. இரண்டாவது நாளான திங்கள்கிழமை தஞ்சாவூா் வடக்கு வாசல் ஏ.ஒய்.ஏ. நாடாா் வடக்கு லைனை சோ்ந்த எம். சந்தோஷ் (42) தா்பூசணியுடன் வந்தாா்.

இதையடுத்து, கோட்டாட்சியரும், தஞ்சாவூா் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலருமான எம். வேலுமணியிடம் வேட்பு மனு தாக்கல் செய்தாா்.

பின்னா், செய்தியாளா்களிடம் சந்தோஷ் தெரிவித்தது:

தஞ்சாவூா் தொகுதியில் தொடா்ந்து நான்காவது முறையாக சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிடுகிறேன். ஏற்கெனவே 3 முறை போட்டியிட்டபோது தா்பூசணி சின்னம் கிடைத்தது. இந்த முறையும் தா்பூசணி சின்னம் கிடைக்கும். எனவே, தா்பூசணியுடன் வேட்பு மனு தாக்கல் செய்ய வந்தேன். சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்காக இத்தோ்தலில் போட்டியிடுகிறேன் என்றாா் சந்தோஷ்.

முழு கட்டுரையைப் படிக்க →