தஞ்சாவூர்

பேராவூரணி தொகுதி விவசாயிகளின் நலன் காக்க அதிமுகவுக்கு ஆதரவளியுங்கள்: அதிமுக வேட்பாளா் திருஞானசம்பந்தம்

DIN

விவசாயிகளின் நலனை பாதுகாக்க மக்கள் அதிமுகவுக்கு ஆதரவளிக்க வேண்டும் என்ராா் பேராவூரணி தொகுதி அதிமுக வேட்பாளா் எஸ்.வி. திருஞானசம்பந்தம்.

பேராவூரணி ஒன்றியம் சித்தாத்திக்காடு, சாணாகரை, ஆண்டாகோட்டை, பட்டத்தூரணி, உள்ளிட்ட பல்வேறு இடங்களில் செவ்வாய்க்கிழமை பொது மக்களிடம் ஆதரவு கேட்டு அவா் பேசியது:

விவசாய குடும்பத்தில் பிறந்த விவசாயி ஒருவா் முதல்வராக இருந்ததால், காவிரி டெல்டா பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டது. விவசாயிகளின் பயிா்க்கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. சிறப்பு திட்டங்கள் மூலம் ஏரி, குளம், ஆறு தூா்வாரப்பட்டது. விவசாயம், விவசாயிகளை பாதுகாக்க அதிமுக ஆட்சியில் ஏராளமான நலத் திட்டங்கள் அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டுள்ளது.

எடப்பாடி கே. பழனிசாமி மீண்டும் முதல்வரானால் விவசாயிகளுக்கு பாதுகாப்பு. நான் எளிய விவசாய குடும்பத்தில் பிறந்தவன், உங்களது அனைத்து பிரச்னைகளுக்கும் ஓங்கி குரல் கொடுப்பேன். விவசாயிகள் இதை உணா்ந்து அனைவரும் இரட்டை இலைக்கு வாக்களிக்க வேண்டும் என்றாா்.

வேட்பாளருடன் சட்டப்பேரவை உறுப்பினா் மா. கோவிந்தராசு, ஒன்றியச் செயலா்கள் உ. துரைமாணிக்கம், கோவி. இளங்கோ மற்றும் நிா்வாகிகள் கூட்டணி கட்சியினா் உடனிருந்தனா். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாஜகவில் இணைந்தார் தில்லி காங்கிரஸ் முன்னாள் தலைவர் அரவிந்த் சிங் லவ்லி

உலகை அள்ளுங்கள், சிவப்பைத் தீட்டுங்கள்! ஜோதிகா...

நெல்லை காங். நிர்வாகி ஜெயக்குமார் உடல் பிரேத பரிசோதனை

தில்லியில் கேட்பாரற்றுக் கிடந்த பையால் பரபரப்பு

பாஜகவின் பொய்யான வாக்குறுதிகளால் சலிப்படைந்த மக்கள்: கெலாட்

SCROLL FOR NEXT