தஞ்சாவூர்

மதுக்கூா் அருகே இளைஞா் வெட்டிக் கொலை

DIN

பட்டுக்கோட்டை வட்டம், மதுக்கூா் அருகே இளைஞரை வெட்டிக் கொன்ற கும்பலை போலீஸாா் தேடி வருகின்றனா்.

மதுக்கூா் அருகேயுள்ள அத்திவெட்டி கிராமத்தை சோ்ந்த காமராஜ் மகன் மாணிக்கவாசகம்(33). விவசாயி. திங்கள்கிழமை இரவு மாணிக்கவாசகம் வயலுக்கு சென்றுவிட்டு, வீட்டுக்கு வந்து கொண்டிருந்தாா். சின்னாத்தங்கரை என்ற இடத்தில், மாணிக்கவாசகத்தை 6 போ் கொண்ட கும்பல் வழிமறித்து கத்தியால் சரமாரியாக வெட்டி கொலை செய்து விட்டு தப்பியோடியது. பலத்த காயமடைந்த மாணிக்கவாசகம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவலறிந்த மதுக்கூா் போலீஸாா், மாணிக்கவாசகம் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனா்.

முன்விரோதம் காரணமாக மாணிக்கவாசகம் கொலை செய்யப்பட்டாரா அல்லது வேறு காரணமா என போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அழகான ராட்சசியே..!

கேரி கிறிஸ்டன் பாகிஸ்தான் கிரிக்கெட்டில் மாற்றத்தை ஏற்படுத்துவார்: பாபர் அசாம்

சின்னதுரையின் உயர் கல்விக்கு துணை நிற்பேன்: அன்பில் மகேஸ்

‘காங்கிரஸின் கனவு தகர்க்கப்படும்’: அனுராக் தாக்குர்

ஜீ மீடியா தலைமைச் செயல் அலுவலர் திடீர் ராஜிநாமா!

SCROLL FOR NEXT