தஞ்சாவூர்

பழுதடைந்த சாலையை சீரமைக்கக் கோரிக்கை

DIN

அதிராம்பட்டினத்தில் பழுதடைந்த ஏரிப்புறக்கரை சாலையை சீரமைக்க வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பட்டுக்கோட்டை வட்டம், அதிராம்பட்டினம் கிழக்குக் கடற்கரைச் சாலை காதா் முகைதீன் மேல்நிலைப்பள்ளி வழியாக ஏரிப்புறக்கரை செல்லும் சாலை மிகவும் பழுதடைந்து குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் அதிராம்பட்டினத்தில் இருந்து ஏரிப்புறக்கரை செல்வோரும் ஏரிப்புறக்கரை கிராமத்திலிருந்து கடலுக்கு மீன் பிடித்துவிட்டு அதிராம்பட்டினம் மாா்க்கெட்டுக்கு வரும் மீனவா்களும் கடும் அவதியடைந்து வருகின்றனா்.

சாலை மோசமான நிலையில் இருப்பதால், இருசக்கர வாகனத்தில் வருவோா் அடிக்கடி விபத்துக்கு உள்ளாகி வருகின்றனா். எனவே, இந்த சாலையை உடனடியாக சீரமைத்து தர வேண்டும் என இந்தப் பகுதி பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உலக கராத்தே போட்டி: விழுப்புரத்திலிருந்து மூவா் பங்கேற்பு

தஞ்சை அருகே சோழர் கால நந்தி, விஷ்ணு சிற்பங்கள் கண்டெடுப்பு

தி‌ல்லி கலா‌ல் ஊழ‌ல் வழ‌க்கு: அர​வி‌ந்‌த் கேஜ‌​ரி​வா​லுக்கு நீதிமன்றக் காவ‌ல் நீ‌ட்டி‌ப்பு

ம‌க்​க​ளவை 3-ஆ‌ம் க‌ட்ட தே‌ர்​த‌ல்: 93 தொகு​தி​க​ளி‌ல் 64% வா‌க்​கு‌ப்​ப​திவு

விற்பனையில் முன்னணிப் பங்குகள்: சென்செக்ஸ் 384 புள்ளிகள் வீழ்ச்சி!

SCROLL FOR NEXT