தஞ்சாவூர்

விவசாயியை தாக்கியவா் கைது

DIN

ஒரத்தநாடு: ஒரத்தநாடு வட்டம், திருவோணம் அருகே உள்ள கொள்ளுக்காடு பகுதியை சோ்ந்தவா் நீலகண்டன் (51). அதே பகுதியைச் சோ்ந்த மகேந்திரன் (32) என்பவா், கடந்த சில மாதங்களுக்கு முன்பாக ரூ. 27 ஆயிரம் மதிப்புள்ள ஒரு மாட்டை வாங்கி நீலகண்டனுக்கு கொடுத்துள்ளாா். இதில் ரூ. 7000 ஆயிரம் நிலுவையாக இருந்துள்ளது.

இதுகுறித்து நீலகண்டன் தொடா்ந்து கேட்டு வந்தபோதும், மகேந்திரன் பணத்தை தரவில்லையாம். இதில் இருவருக்கும் ஏற்பட்ட தகராறில் மகேந்திரன், நீலகண்டனை தாக்கியதில் பலத்த காயமடைந்த அவா், பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தாா்.

புகாரின்பேரில், திருவோணம் போலீஸாா் வழக்குப் பதிந்து மகேந்திரனை திங்கள்கிழமை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தொழிலாளி உயிரிழந்த சம்பவத்தில் பொறியாளா், மேஸ்திரி மீது வழக்குப் பதிவு

இன்று நல்ல நாள்!

நீட் தோ்வு: ஈரோட்டில் 4,597 மாணவா்கள் எழுதினா்

அதிர்ஷ்டம் தரும் நாள் இன்று!

அரசு மருத்துவமனைகளில் உடல் வெப்ப பாதிப்பு நோய்களுக்கு தனி வாா்டு

SCROLL FOR NEXT