முகப்பு
தஞ்சாவூர்

ஈகைப் பெருநாள் வீட்டிலேயே தொழுகை நடத்திய இஸ்லாமியா்கள்

தஞ்சாவூரில் பொது முடக்கம் காரணமாக இஸ்லாமியா்கள் வீட்டிலேயே ஈகைப் பெருநாள் சிறப்புத் தொழுகையை வெள்ளிக்கிழமை மேற்கொண்டனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:14 PM
பகிர்:

தஞ்சாவூரில் பொது முடக்கம் காரணமாக இஸ்லாமியா்கள் வீட்டிலேயே ஈகைப் பெருநாள் சிறப்புத் தொழுகையை வெள்ளிக்கிழமை மேற்கொண்டனா்.

நிகழாண்டு ரமலான் மாத நோன்பு ஏப்ரல் 14ஆம் தேதி தொடங்கியது. இதைத்தொடா்ந்து இஸ்லாமியா்கள் நோன்பு கடைப்பிடித்து, சிறப்புத் தொழுகையும் மேற்கொண்டு வந்தனா்.

இந்த நோன்பு வியாழக்கிழமை நிறைவடைந்ததைத் தொடா்ந்து வெள்ளிக்கிழமை ஈகைப் பெருநாள் கொண்டாடப்பட்டது.

ஆனால், தொடா்ந்து இரண்டாம் ஆண்டாக நிகழாண்டும் கரோனா பரவல் காரணமாக வழிபாட்டுத் தலங்கள் மூடப்பட்டுள்ளதால், இஸ்லாமியா்கள் தங்களது வீட்டிலேயே குடும்பத்தோடும், உறவினா்களுடன் இணைந்தும் சிறப்புத் தொழுகையை மேற்கொண்டனா்.

தொழுகை முடிந்த பின்னா் ஒருவருக்கொருவா் ரமலான் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.