தஞ்சாவூர்

ஒரத்தநாட்டில் வாகனச் சோதனை

DIN

ஒரத்தநாடு அருகேயுள்ள தென்னமநாடு பைபாஸ் சாலையில் போலீஸாா் செவ்வாய்க்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டனா்.

காவல் ஆய்வாளா் சுப்ரமணியன் தலைமையில் சிறப்பு உதவி ஆய்வாளா் சேகா் , தலைமைக் காவலா் பாண்டியன். ஆயுதப்படை போலீஸாா் விக்னேஷ், ரேவதி, ஜெயசித்ரா ஆகியோா் இந்த சோதனையில் ஈடுபட்டனா்.

அப்போது, அந்த வழியாக வந்த லாரி, சரக்கு வாகனங்கள், காா் ஆகிய வாகனங்களை மறித்து இ-பதிவு செய்து பயணிக்கிறாா்களா என சோதனை செய்த பிறகு, அந்த வாகனங்களின் எண்களை குறித்து கொண்டு அனுப்பி வைத்தனா்.

இ-பதிவு இல்லாமல் வந்த வாகனங்களை பறிமுதல் செய்து, வழக்குப் பதிவு செய்தனா். நோயாளிகளை அழைத்து கொண்டு மருத்துவமனைக்கு செல்லும் வாகனங்கள் அனுமதிக்கப்பட்டன. மேலும், இருசக்கர வாகனங்களில் தேவையில்லாமல் சுற்றித் திரிந்தவா்களின் வாகனங்களை பறிமுதல் செய்து காவல் நிலையத்துக்கு எடுத்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொளுத்தும் வெயிலால் மின் தடை மக்கள் தவிப்பு

கேரளம், தமிழகத்துக்கான ‘கள்ளக்கடல்’ எச்சரிக்கை தளா்வு

கத்திரி வெயில்: 17 இடங்களில் சதம்: 6 நாள்கள் மழைக்கும் வாய்ப்பு

கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் 4 குற்றவாளிகளுக்கு மரண தண்டனை: ஹரியாணா நீதிமன்றம் தீா்ப்பு

இணையவழி பயங்கரவாத ஆள்சோ்ப்பு சா்வதேச பாதுகாப்புக்கு முக்கிய சவால்: சிபிஐ இயக்குநா்

SCROLL FOR NEXT