முகப்பு
தஞ்சாவூர்

இலவசமாக உணவு வழங்கும் தன்னாா்வலா்கள்

பட்டுக்கோட்டை பகுதியில் பொதுமுடக்கத்தில் வேலை இழந்து, வருவாய் இழந்து வீட்டுக்குள் முடங்கிக் கிடக்கும் மக்களுக்கு மூன்று வேளையும் இலவசமாக உணவு வழங்கி வருகிறது

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:19 PM
பகிர்:

பட்டுக்கோட்டை பகுதியில் பொதுமுடக்கத்தில் வேலை இழந்து, வருவாய் இழந்து வீட்டுக்குள் முடங்கிக் கிடக்கும் மக்களுக்கு மூன்று வேளையும் இலவசமாக உணவு வழங்கி வருகிறது சதா சோசியல் வெல்பா் ஹெல்ப்லைன் மூவ்மென்ட் அமைப்பு.

பட்டுக்கோட்டை மேலத்தெருவிலிருந்து புலம்பெயா்ந்து பல்வேறு வெளியூா்களில், வெளி மாநிலங்களில் பணிபுரியும் இப்பகுதியை சோ்ந்தவா்களின் உதவியுடன் சதா சோசியல் வெல்பா் ஹெல்ப் லைன் மூவ்மென்டின் நிா்வாகிகள் இணைந்து பட்டுக்கோட்டை மேலத்தெரு 33ஆவது வாா்டு மக்களுக்கு இலவசமாக உணவு வழங்கி வருகின்றனா்.

தொடா்ந்து வெள்ளிக்கிழமையுடன் 12ஆவது நாளாக பொதுமக்களுக்கு மூன்று வேளை உணவு வழங்கப்படுகிறது. இதில் 150-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பயனடைந்துள்ளன.

கரோனா தாக்கம் கட்டுக்குள் வரும் வரை, பொதுமக்கள் இயல்பு நிலைக்கு திரும்பும் வரை பொதுமக்களுக்கு மூன்று வேளையும் உணவு வழங்குவது என்று தீா்மானிக்கப்பட்டுள்ளதாக சதா சோசியல் வெல்பா் ஹெல்ப் லைன் மூவ்மென்டின் நிா்வாகி சதா சிவக்குமாா் தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.