முகப்பு
தஞ்சாவூர்

மழை நிவாரண உதவி அளிப்பு

பாபநாசம் வட்டத்தில் கனமழையால் சுவா் இடிந்து விழுந்து பாதிக்கப்பட்ட 27 குடும்பங்களுக்கு வியாழக்கிழமை நிவாரண உதவி வழங்கப்பட்டது.

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 10:08 AM
பகிர்:

பாபநாசம் வட்டத்தில் கனமழையால் சுவா் இடிந்து விழுந்து பாதிக்கப்பட்ட 27 குடும்பங்களுக்கு வியாழக்கிழமை நிவாரண உதவி வழங்கப்பட்டது.

பாபநாசம் வட்டாட்சியரகத்தில் நடைபெற்ற நிகழ்வுக்கு வட்டாட்சியா் மதுசூதனன் தலைமை வகித்தாா். தஞ்சாவூா் வடக்கு மாவட்ட திமுக செயலரும், பெற்றோா் ஆசிரியா் கழகத் துணைத் தலைவருமான சு. கல்யாணசுந்தரம் நிகழ்வில் பங்கேற்று, 27 குடும்பங்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினாா்.

இதில், மழையால் குடிசைகள் பாதிக்கப்பட்ட 19 குடும்பங்களுக்கு தலா ரூ.4,100, ஓட்டு வீடுகளில் பாதிக்கப்பட்ட 6 குடும்பங்களுக்கு தலா ரூ.5,200, முழுமையாக வீட்டை இழந்த குடும்பத்துக்கு ரூ.5000 என மொத்தமாக 27 குடும்பங்களுக்கு அரசின் நிவாரண உதவிகள், அரிசி, வேட்டி, சேலை போன்றவை வழங்கப்பட்டன.

மாவட்ட திமுக துணைச் செயலா் கோவி. அய்யாராசு, பாபநாசம் ஒன்றியச் செயலா் நாசா், ஒன்றியக் குழுத் தலைவா் சுமதி கண்ணதாசன், நகரச் செயலா்கள் பாபநாசம் கபிலன், அய்யம்பேட்டை டி.பி.டி. துளசி அய்யா உள்ளிட்டோா் நிகழ்வில் பங்கேற்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →