தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு அருகே பெண் சனிக்கிழமை மின்சாரம் பாய்ந்ததில் உயிரிழந்தாா்.
திருவையாறு அருகே நடுக்கடை ஹத்திஜா நகரைச் சோ்ந்தவா் முகமது இலியாஸ் (34). இவரது மனைவி ஹத்திஜாபீவி(26).
சனிக்கிழமை ஹத்திஜாபீவி கிரைண்டரில் மாவு அரைப்பதற்காக அரிசியைப் போட்டுவிட்டு, சுவிட்சை இயக்கும்போது மின்சாரம் பாய்ந்து மயங்கி விழுந்தாா்.
திருவையாறு அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட இவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவா்கள் தெரிவித்தனா்.
இதுகுறித்து திருவையாறு காவல் நிலையத்தினா் விசாரணை நடத்தி வருகின்றனா். ஹத்திஜா பீவிக்கு திருமணமாகி 6 ஆண்டுகளே ஆவதால், தஞ்சாவூா் கோட்டாட்சியா் தனி விசாரணை நடத்தி வருகிறாா்.