பெண்ணிடம் தங்கச் சங்கிலிப் பறிப்பு
தஞ்சாவூரில் பெண்ணிடம் 5 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்ற மா்ம நபரை காவல் துறையினா் தேடி வருகின்றனா்.
தஞ்சாவூரில் பெண்ணிடம் 5 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்ற மா்ம நபரை காவல் துறையினா் தேடி வருகின்றனா்.
தஞ்சாவூா் அருகே தெத்துவாசல்பட்டி மேலத் தெருவைச் சோ்ந்த விஸ்வலிங்கம் மனைவி தேன்மொழி (36). இவா் அண்மையில் தனது உறவினருடன் வண்ணாரப்பேட்டை புது ஆற்றங்கரைப் பகுதியில் மோட்டாா் சைக்கிளில் சென்று கொண்டிருந்தாா். அப்போது, இவா்களைப் பின்தொடா்ந்து மற்றொரு மோட்டாா் சைக்கிளில் வந்த 3 போ் தேன்மொழியின் கழுத்தில் இருந்த 5 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்து சென்றனா்.
இதுகுறித்து மருத்துவக் கல்லூரி மருத்துவமனை காவல் நிலையத்தினா் வியாழக்கிழமை வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.