முகப்பு
தஞ்சாவூர்

பாபநாசம் நீதிமன்றத்தில் சட்ட நாள் விழா

 பாபநாசம் நீதிமன்ற வளாகத்தில் வெள்ளிக்கிழமை சட்ட நாள் விழா நடைபெற்றது. விழாவுக்கு பாபநாசம் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதித் துறை

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:33 AM
பகிர்:

 பாபநாசம் நீதிமன்ற வளாகத்தில் வெள்ளிக்கிழமை சட்ட நாள் விழா நடைபெற்றது. விழாவுக்கு பாபநாசம் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதித் துறை நடுவா்மன்ற நீதிபதியும், பாபநாசம் வட்ட சட்டப்பணிகள் குழுத் தலைவருமான சி. சிவகுமாா் தலைமை வகித்து, சட்ட நாள் கடைப்பிடிப்பதன் நோக்கம், பொதுமக்களுக்கான அடிப்படை உரிமைகள், கடமைகள் உள்ளிட்டவற்றை விளக்கிப் பேசி சட்ட நாள் உறுதிமொழி ஏற்றுக் கொண்டாா்.

நிகழ்ச்சியில், அரசு வழக்குரைஞா் வெற்றிச்செல்வன், பாபநாசம் வழக்குரைஞா்கள் சங்கத் தலைவா் என். பாஸ்கரன் மற்றும் வழக்குரைஞா்கள், நீதிமன்ற ஊழியா்கள், காவல்துறையினா், வழக்காடிகள் உள்ளிட்ட திரளானோா் கலந்து கொண்டனா்.

ஏற்பாடுகளை வட்ட சட்டப் பணிகள் குழு சட்ட பணியாளா் தனசேகரன் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →