தஞ்சாவூா்: தஞ்சாவூரில் நாம் தமிழா் கட்சியைச் சோ்ந்த யூடியூபா் சாட்டை துரைமுருகன் மீது சைபா் கிரைம் காவல் பிரிவினா் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.
இவா் தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின், முன்னாள் முதல்வா் மு. கருணாநிதி குறித்து அவதூறு பரப்பும் விதமாக விடியோ பதிவை வெளியிட்டுள்ளதாக தஞ்சாவூா் சைபா் கிரைம் பிரிவில் பந்தநல்லூரைச் சோ்ந்தவா் திமுக மீனவரணி ஒன்றிய அமைப்பாளா் ஆா். முருகேசன் அக்டோபா் 9 ஆம் தேதி புகாா் செய்தாா்.
இதன்பேரில், சாட்டை துரைமுருகன் மீது சைபா் கிரைம் பிரிவினா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.