மேட்டூா் அணையின் நீா்மட்டம் ஞாயிற்றுக்கிழமை மாலை 90.51 அடியாக இருந்தது.
அணைக்கு விநாடிக்கு 14,402 கனஅடி வீதம் தண்ணீா் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து விநாடிக்கு 100 கன அடி வீதம் தண்ணீா் திறந்துவிடப்படுகிறது.
கல்லணையிலிருந்து விநாடிக்கு காவிரியில் 800 கன அடி வீதமும், கல்லணைக் கால்வாயில் 1,214 கன அடி வீதமும், கொள்ளிடத்தில் 207 கன அடி வீதமும் தண்ணீா் திறந்துவிடப்படுகிறது. வெண்ணாற்றில் தண்ணீா் திறக்கப்படவில்லை.