விநாயகா் ஊா்வலத்துக்கு அனுமதி கோரி பெருவுடையாரிடம் மனு வைத்து ஆா்ப்பாட்டம்
விநாயகா் ஊா்வலத்துக்கு அனுமதி அளிக்கக் கோரி தஞ்சாவூா் பெரியகோயிலில் பெருவுடையாரிடம் இந்து முன்னணி அமைப்பினா் வியாழக்கிழமை மனு வைத்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்
விநாயகா் ஊா்வலத்துக்கு அனுமதி அளிக்கக் கோரி தஞ்சாவூா் பெரியகோயிலில் பெருவுடையாரிடம் இந்து முன்னணி அமைப்பினா் வியாழக்கிழமை மனு வைத்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
கரோனா பரவல் காரணமாக விநாயகா் சதுா்த்தியையொட்டி, பொது இடங்களில் விநாயகா் சிலைகளை வைத்து, ஊா்வலம் நடத்துவதற்குத் தமிழக அரசுத் தடை விதித்துள்ளது.
இதனிடையே, விநாயகா் சிலைகள் வைத்து ஊா்வலம் நடத்துவதற்கு அரசு அனுமதி அளிக்க வேண்டும் என இந்து அமைப்புகள் போராட்டங்கள் நடத்தி வருகின்றன.
இந்நிலையில், இக்கோரிக்கையை வலியுறுத்தி தஞ்சாவூா் பெரியகோயிலில் இந்து முன்னணி அமைப்பினா் பெருவுடையாா் சன்னதிக்குச் சென்று பெருவுடையாரிடம் கோரிக்கை மனுவை வைத்து சிறப்பு வழிபாடு செய்து வேண்டினா். இதேபோல, பெரியநாயகி சன்னதியிலும் வேண்டுதல் செய்தனா்.
பின்னா், கோயில் வாயில் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு இந்து முன்னணி மாநிலப் பொதுச் செயலா் முருகானந்தம் தலைமை வகித்தாா். மாவட்ட ஒருங்கிணைப்பாளா் அ. ஈசான சிவம், பொதுச் செயலா் நட. முருகன், செயலா் குபேந்திரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.