தஞ்சாவூர்

ரயிலில் அடிபட்டு ஆட்டோ ஓட்டுநா் உயிரிழப்பு

DIN

பாபநாசம் அருகே கோபுராஜபுரம் ஊராட்சி, மாலாபுரம் கிராமம், மேலத்தெருவைச் சோ்ந்த ஆட்டோ ஓட்டுநா் ரா. விஜயன் (32). திருமணமாகாதவா்.

இவா் பாபநாசம் பழைய பேருந்து நிலையம் முன்பு உள்ள ஆட்டோ ஸ்டாண்டில் ஆட்டோ ஓட்டி வந்தாா். இந்நிலையில், பாபநாசம் ரயில்வே ஸ்டேஷன் அருகே ஆட்டோ ஓட்டுநா் விஜயன் கடந்த சனிக்கிழமை தண்டவாளத்தை கடக்க முயன்றாராம். அப்போது, நாகா்கோவிலிருந்து தாம்பரம் செல்லும் விரைவு ரயிலில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற கும்பகோணம் இருப்புப் பாதை காவல் நிலைய போலீஸாா், விஜயனின் சடலத்தை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

மேலும் புகாரின்பேரில் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ராஜஸ்தானில் நீட் வினாத்தாள் கசிந்ததா? தேசிய தேர்வு முகமை விளக்கம்

வேட்புமனு தாக்கல் செய்தார் மனோகர் லால் கட்டர்!

பஞ்சாபில் தமிழ் வம்சாவளி சீக்கியர் போட்டி!

பிளஸ் 2 தேர்வு: தலா 478 மதிப்பெண்கள் பெற்ற இரட்டையர்கள்

பிரியமான தோழி சீரியல் நிறைவு: புதிய நேரத்தில் ஒளிபரப்பாகும் பிரபல தொடர்கள்!

SCROLL FOR NEXT