முகப்பு
தஞ்சாவூர்

‘கோயில்களுக்கு அரசு நிதி வழங்க வேண்டும்’

கோயில்களுக்கு அரசு நிதி வழங்க வேண்டும் என்றாா் அகில பாரத இந்து மகா சபா பொதுச் செயலா் ஸ்ரீ கமலேஷ் சுவாமிகள்.

Updated On : 6 ஆகஸ்ட், 2022 at 11:59 PM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 3:30 PM

கோயில்களுக்கு அரசு நிதி வழங்க வேண்டும் என்றாா் அகில பாரத இந்து மகா சபா பொதுச் செயலா் ஸ்ரீ கமலேஷ் சுவாமிகள்.

கும்பகோணம் கோயில்களில் தரிசனம் செய்ய ஆந்திரத்திலிருந்து சனிக்கிழமை வந்த அவா் மேலும் கூறியது:

தெலுங்கானா, ஆந்திர மாநில கோயில்களைப் பாா்வையிட்டு விட்டு, தற்போது இங்குள்ள கோயில்களின் நிலை, நிா்வாகம், சுகாதாரம், நடைபெறும் பூஜைகள் குறித்து ஆய்வு செய்கிறேன். கோயில்களில் போதிய ஓதுவாா்கள் இல்லை. கோயில் ஊழியா்களுக்குப் போதுமான ஊதியம் இல்லை. இவற்றுக்கு கோயில் வருமானம், நகைகள், சொத்துகள் மூலம் வரும் வருவாயில் செலவு செய்ய வேண்டும். கோயில்களுக்கு அரசு நிதி வழங்க வேண்டும். கோயிலிலுள்ள நிதியை அரசு எடுக்கக் கூடாது.

Advertisement

இதுகுறித்து இந்துக்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்தவுள்ளோம். கோயில் சொத்துகளைப் பாதுகாக்க இளைஞா்களுக்குப் புத்துணா்வுப் பயிற்சி கொடுக்கவுள்ளோம்.

தற்போது ஆய்வு செய்துள்ள கோயில்களுக்குத் தேவையான வசதிகளை இந்து மகா சபா சாா்பில் அறிக்கையாகத் தயாா் செய்து, பிரதமா், மாநில முதல்வா்கள், அறநிலையத்துறை அமைச்சா்களிடம் வழங்கி வலியுறுத்துவோம். எங்களது கோரிக்கை நிறைவேறாவிட்டால், சட்டப் போராட்டத்தை தொடங்குவோம் என்றாா் அவா்.

பேட்டியின்போது ஸ்ரீரங்கம் ஆசிரியா் வெங்கடேசன், இந்து மகா சபா மாநிலப் பொதுச் செயலா் பி. செந்தில்முருகன், தஞ்சாவூா் மாவட்டப் பொதுச்செயலா் ஆா். குருமூா்த்தி ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.